search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெரு நாய்கள் தொல்லை"

    • குமாரபாளையத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.
    • அவற்றை பிடிக்க பொதுமக்கள் வற்புறுத்தி உள்ளனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பகுதியில் நாய்கள் தொந்தரவு அதிகம் இருப்பதால், சில ஆண்டுகளுக்கு முன் நகராட்சி நிர்வாகம் சார்பில் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது நகரில் உள்ள அனைத்து வார்டுகளில் நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது குறித்து ஒவ்வொரு நகராட்சி கூட்டங்களிலும் அனைத்து கவுன்சிலர்களும் புகார் கூறி வருகின்றனர்.

    பிரதான சாலைகளான சேலம் சாலை, பள்ளிபா ளையம் சாலை, இடைப்பாடி சாலை, ஆனங்கூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக சுற்றி திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள், மாணவ, மாணவியர், வயதானவர்கள், நடைபயிற்சி செய்பவர்கள், விசைத்தறி, கைத்தறி, சாயப்பட்டறை உள்ளிட்ட பணிகளுக்கு செல்வோர் உள்ளிட்ட பலர் இந்த நாய்க ளால் பெறும் அவஸ்தைக்கும், அச்சத்திற்கும் ஆளாகி வருகிறார்கள்.

    சில நேரங்களில் சாலையில் செல்வோரை நாய்கள் துரத்துவதோடு கடித்தும் விடுகின்றன. இது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே நகரில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • மாநகர் பகுதி முழுவதும் பெரும்பாலான இடங்களில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
    • இதற்கு முக்கிய காரணம் நாய்களுக்கு கருத்தடை செய்யாமல் இருப்பது தான்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. சமீப காலமாக மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகின்றன. தெரு வோரங்களில் கூட்டமாக கூடியிருந்து தெருவில் வரும் வாகன ஓட்டிகளை துரத்தி வருகின்றன.

    பகல் நேரங்களில் சில சமயம் தெருவில் நடமாடும் பெண்கள், குழந்தைகளையும் துரத்துகின்றன. இதனால் குழந்தைகள், பெண்கள் தெருவில் நடமாட அச்சப்படுகின்றனர்.

    முன்பு கறிக்கடை முன்பு நாய்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது மாநகர் பகுதி முழுவதும் பெரும்பாலான இடங்களில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    இதற்கு முக்கிய காரணம் நாய்களுக்கு கருத்தடை செய்யாமல் இருப்பது தான். முன்பு மாநகராட்சி சார்பில் தெருவில் சுற்றி திரியும் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது.

    தற்போது அது செய்யப்ப டாமல் உள்ளதால் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் நாய்களின் தொல்லையும் அதிகரித்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

    மாநகர் பகுதியில் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்கள் தெருக்களில் சுற்றி திரிகின்றன. நாய் கடிக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

    எனவே முன்பு போல் தெருவில் சுற்றி தெரியும் நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
    • வாகனங்களில் வந்து விழுவதும், இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்துவதும், என தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

     பல்லடம்:

    பல்லடத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் பெருகி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். வாகனங்களில் வந்து விழுவதும், இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்துவதும், என தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே உரிய நடவடிக்கை எடுத்து அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×